எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் இணையும் வெளிநாட்டு நடிகை.. யார் தெரியுமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமேசான் காடுகளில் படமாக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் அதற்கான பணியும் தற்போதே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வெளிநாட்டு நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பிறந்து இந்தோனேசியாவில் பிரபல நடிகையாக இருக்கும் செல்சியா இஸ்லான் என்பவர்தான் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எஸ்.எஸ்.ராஜமெளலி விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை ஜெனிலியா இஸ்லான் பல இந்தோனேசியா திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அவர் முதல் முதலாக ஒரு இந்திய திரைப்படத்தில் நடிக்க உள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments