போனை திருடிய சிறுவனுக்கு பரிசு வழங்கிய சென்னை போலீஸ்… சுவாரசியச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,September 21 2020]

 

13 வயது சிறுவன் சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் போலீசிடம் மாட்டிக் கொண்டபோது போலீசாரே அந்தச் சிறுவனுக்கு ஒரு செல்போனை பரிசாக வழங்கிய சுவாரசியச் சம்பவமும் நடைபெற்று இருக்கிறது.

செல்போன் திருடிய சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் தான் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவன் என்பதைச் சிறுவன் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா தாக்கல் காரணமாக தன்னால் ஆன்லைனில் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அப்பா ஒரு பிஸ்கட் கடையில் வேலைப் பார்த்து வருகிறார். அம்மா வீட்டு வேலை செய்துவருபவர் என்றும் கூறியுள்ளார். தனக்கு படிக்கும் ஆர்வம் இருப்பதையும் அச்சிறுவன் போலீசிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செல்போன் திருட்டு சம்பவத்தில் தங்களுக்கு உதவி செய்தால் உனக்கு ஒரு செல்போனை தருகிறோம் என்று உள்ளூர் ரவுடிகள் கும்பல் தெரிவித்ததால் மட்டுமே இந்தச் சம்பவத்தை செய்ததாகவும் அந்தச் சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளார். சிறுவன் கூறியதைக் கேட்ட காவல் துறையினர் நெகிழ்ந்து போய் புதிதாக ஒரு செல்போனை வாங்கி அச்சிறுவனிடம் நீட்டியிருக்கின்றனர். இதனால் அச்சிறுவன் கண்ணீர் மல்க காவல் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்து இருக்கிறான். இச்சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா தாக்கத்தால் சவுதியில் ஆயிரகணக்கான இந்தியர்கள் வேலையிழப்பு… தெருவில் கையேந்திய அவலம்!!!

கொரோனா தாக்கத்தால் சவுதியில் வேலைப்பார்த்து வந்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தற்போது வேலை இழந்து தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்: பழம்பெரும் நடிகர் ஆவேசம்!

நடிகர் சூர்யாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என பழம்பெரும் நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யார் யார்? கசிந்த பட்டியல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கின்றன என்றாலும் தற்போது வெளிவந்துள்ள தகவல் கிட்டத்தட்ட உறுதி

அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறிய நடிகை: முன்னாள் மனைவியின் திடீர் ஆதரவு!

பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷப் பாலியல் புகார் தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்: பரபரப்பு தகவல்

பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தாலும் நேற்றும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும்