close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்: பரபரப்பு தகவல்

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தாலும் நேற்றும் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல்களாக இருக்கின்றன.

ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. பிக்பாஸ் இரண்டாம் சீசனில் ஆனந்த வைத்தியநாதன், மூன்றாவது சீசனில் மோகன் வைத்யா ஆகிய பாடகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது நான்காம் சீசனில் பாடகர் வேல்முருகன் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’சுப்பிரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’மதுர குலுங்க குலுங்க’ ’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல கிராமிய திரைப்பாடல்கள் பாடி இசை ரசிகர்களை கவர்ந்தவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான தனுஷின் ’அசுரன்’ படத்தில் கூட ’கத்தரி பூவழகி’ என்ற பாடலை இவர் பாடியுள்ளார் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.