ஹர்திக் பாண்ட்யா மனைவி புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்: என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நடிகை நடாஷாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இருப்பினும் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா அறிவித்தார் என்பதும், அதன் பின் ஹர்திக்-நடாஷா ஜோடிக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா, நடாஷா ஆகிய இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது குழந்தையுடன் கூடிய தங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹர்திக் பாண்டியா தனக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கான தலைப்பில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் தவறானது என்றும் அது தங்கள் தளத்திற்கு எதிரானது என்றும் கூறி இன்ஸ்டாகிராம் அந்த புகைப்படத்தை நீக்கியது.

ஆனால் அதே புகைப்படத்தை மீண்டும் நடாஷா எந்தவித தலைப்பும் இல்லாமல் பதிவு செய்தார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடாஷாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

View this post on Instagram

❤️ #alreadymissyou ???? @hardikpandya93

A post shared by Nataša Stanković✨ (@natasastankovic__) on Aug 17, 2020 at 6:31am PDT

More News

ஜெயிலுக்கு போன கணவர், ஜாமீன் எடுக்க உதவிய நண்பருடன் மனைவி கள்ளக்காதல்: அதன்பின் நடந்த விபரீதம்

கணவரை ஜெயிலுக்கு போனதை அடுத்து கணவரின் நண்பரிடம் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததை அடுத்து இந்த விஷயம் தெரிந்து

ஒரே குடும்பத்தில் 19 கொரோனா நோயாளிகள்: மருத்துவமனையில் சுஷாந்த் பாடலுக்கு நடனமாடி கொண்டாட்டம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

சர்வாதிகாரத்தின் உச்சம்- உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்க செல்லப்பிராணிகளைக் கொல்லும் வடகொரியா!!!

உலகத்திலேயே மிகவும் மர்மமான நடவடிக்கைகளைக் கொண்ட நாடான வடகொரியா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை நாட்டு மக்களிடம் வெளியிட்டு இருக்கிறது

ஆத்தா மதுரை மீனாட்சிய வேண்டுகிறேன்: எஸ்பிபி குறித்து நடிகர் சூரி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று

அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி, மகளுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.