பிக்பாஸ் சீசன் 3 பிரபலத்தை காதலிக்கின்றாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை?

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்த நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிகிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரவிகிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இணைந்து தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்து வருகின்றனர் என்பதும் அந்த சீரியலில் அவர்களது கெமிஸ்ட்ரி மிகப் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையிலேயே காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவரும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக்கொள்ளும் காட்சிகள் அந்த நடன நிகழ்ச்சியில் இருந்தது என்றும் அந்த காட்சிகள் தத்ரூபமாக இருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இந்த காதலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் அம்மா என்னை திட்டியது சரிதான்: ஷிவானியின் மனம் திறந்த பேட்டி!

என்னுடைய அம்மா என்னை திட்டியது சரிதான் என்றும் அந்த அளவிற்கு நான் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தேன் என்றும் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மனம் திறந்து கூறியுள்ளார் 

நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் சுரேஷ் நடிக்கும் படம்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஏற்கனவே திரைப்படங்களில் நடிக்க

பெண்ணிடம் முத்தத்தை லஞ்சமா பெற்ற போலீஸ்… வசமா சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

பெரு நாட்டில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், பெண்ணிடம் இருந்து அபராதத் தொகைக்குப் பதிலாக முத்தத்தை லஞ்சமாகப் பெற்று சர்ச்சையில் மாட்டி உள்ளார்.

தனுஷின் 'ஜகமே தந்திரம்': டீசருடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் பதவி உயர்வு பெற்ற 'பிகில்' நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது காவல்துறையில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் பதவியைப் பெற்று