close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 3 பிரபலத்தை காதலிக்கின்றாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை?

Monday, February 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராதிகாவின் ’வாணி ராணி’ என்ற சீரியலில் பூஜா என்ற கேரக்டரில் நடித்த நடிகை நவ்யா சுவாமி. இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிகிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரவிகிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இணைந்து தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்து வருகின்றனர் என்பதும் அந்த சீரியலில் அவர்களது கெமிஸ்ட்ரி மிகப் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆனதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையிலேயே காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவரும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ என்று சொல்லிக்கொள்ளும் காட்சிகள் அந்த நடன நிகழ்ச்சியில் இருந்தது என்றும் அந்த காட்சிகள் தத்ரூபமாக இருந்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி ஆகிய இருவரும் இந்த காதலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.