டைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

ஒரு படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக், ஆகியவற்றை அந்த படத்தின் குழுவினர் சஸ்பென்ஸ் வைத்து ஒரு சரியான தேதியில் வெளியிடுவதே தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. ஆனால் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் டைட்டிலை லீக் செய்தது அந்த படத்தின் குழுவினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது

கார்த்தி நடிப்பில் ரொமோ' இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள திரைப்படம் ஒன்றின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் 'சுல்தான்' என ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு தெரிவித்துவிட்டார். இதனால் படக்குழுவினர் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்,. இதுகுறித்து கார்த்தியும் நாயகி ராஷ்மிகா மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தனது செயலுக்கு ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

எஸ்.ஆர்.பிரபு அவர்களின் தயாரிப்பில் விவேக் மெர்வின் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்: சயிர நரசிம்மரெட்டி டீசர் விமர்சனம்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்கு இணையாக இன்னொரு திரைப்படம் இந்தியாவில் வருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில்

சென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்காளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வறட்சி தாண்டவமாகி தண்ணீர் கஷ்டம் ஏற்பட்ட நிலையில் வருணபகவான்

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'மாயா' இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் 'இறவைக்காலம்'

மூவர் கூட்டணியில் திடீர் விரிசல்: கஸ்தூரி-வனிதா மோதல்

கவின் தலைமையிலான ஐவர் கூட்டணிக்கும் வனிதா தலைமையிலான மூவர் கூட்டணிக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில் பனிப்போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே.

டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்!

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து லைக்ஸ்களை குவிக்க பலர் ரிஸ்க் எடுப்பது தெரிந்ததே. அந்த வகையில் சிலசமயம் உயிரையும் இழக்கும் அபாயமும் ஏற்படும்.