வீட்டிற்கு வந்த பிரபல நடிகருக்கு விருந்தளித்த ஷங்கர்; வைரலாகும் டுவிட்

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைக்காக நேற்று நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் தில் ராஜூ ஆகிய இருவரும் சென்னையில் உள்ள ஷங்கரின் இல்லத்திற்கு வந்தனர் என்பதும், இது குறித்த புகைப்படம் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ராம் சரண் தேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று உங்கள் வீட்டிற்கு வந்தபோது உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வரவேற்பும், விருந்தும் மிக அபாரமாக இருந்தது, நன்றிகள் என்று தெரிவித்திருந்தார். அதற்கு சற்று முன் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’உங்களுக்கு விருந்தளிப்பது எங்களின் மிகப்பெரிய மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்று கொண்டிருக்கும் நிலையில் ஷங்கர் முழுவீச்சாக ராம்சரண் தேஜா படத்தை இயக்க உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் ’அன்னியன்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பெண் குழந்தைக்கு அம்மாவானார் விஜய்டிவி சீரியல் நடிகை: வாழ்த்தும் பிரபலங்கள்

விஜய் டிவி உள்பட பல டிவி சீரியல்களில் நடித்தவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை ஸ்ரீதேவி அசோக் பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் 

'சார்பாட்டா' படத்தின் முக்கிய பணியை முடித்த படக்குழுவினர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படம் 'சார்பாட்டா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

பர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே 'வலிமை' வியாபாரம் இத்தனை கோடியா?

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் வெளிநாடு செல்ல

மனைவி சித்தியான சோகக்கதை… ஆத்திரத்தில் காவல் துறையை நாடிய இளைஞர்!

உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் எனும் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது தந்தையைக் காணாமல் பல ஆண்டுகளாகத் தேடியுள்ளார்.

சூர்யாவை மிரட்டுவது, பாஜக-வின் கோழைத்தனம்.....! சிபிஎம் பிரமுகர் பதிலடி....!

நியாமான கருத்துக்களை கூறி வரும் நடிகர் சூர்யாவை மிரட்டுவது பாஜகவின் கோழைத்தனம் என, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.