நாடாளுமன்றத்தில் "Propose" செய்த எம்.பி..!

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

இத்தாலி நாட்டில் எம்பி ஒருவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, தனது தோழியிடம் காதலை கூறிய சம்பவம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது. பூகம்பத்திற்கு பிந்தைய புனரமைப்பு தொடர்பான விவாதம் இத்தாலி நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். ஃப்ளாவியோ டி முரோ என்ற எம்.பி-யின் முறை வந்தது.

அப்போது சபையில் எழுந்து நின்று பேசிய அவர், நாங்கள் ஒவ்வொரு நாளும் தேசிய அவசரநிலைகளில் பிஸியாக இருக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் எங்களை உண்மையாக நேசிப்பவர்களை மற்றும் கவனித்துக்கொள்பவர்களை புறக்கணிக்கிறோம் என்று உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இவ்வாறு பேசிக்கொண்டே பார்வையாளர்கள் மாடத்தில் உட்கார்ந்திருந்த தன் தோழியான எலிசா டி லியோவைப் பார்த்து, தன் மேஜைக்கு அடியில் இருந்து எடுத்து மோதிரம் ஒன்றை உயர்த்தி காட்டி, நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா எலிசா என தனது காதலை முரோ வெளிப்படுத்தினார்.இதை கேட்டு எலிசாவும், அவையில் இருந்த அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யத்தில் திகைத்தனர். பின்னர் சக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்தினர். பின்னர் பேசிய சபாநாயகர் ராபர்டோ ஃபிகோ, உங்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாடாளுமன்றத்தை இவ்வாறு பயன்படுத்தக் கூடாது என கடிந்து கொண்டார்.

பின்னர் வெளியான தகவல்களின் படி எம்பி முரோவின் காதலை எலிசா ஏற்று கொண்டதாகவும், விரைவில் அவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More News

ரஜினியுடன் விஜய் பட இயக்குனர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டால் அதன் பின்னர் உச்சத்துக்குச் சென்று விடலாம் என்பது இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் நிலையாக உள்ளது 

செல்போனில் மூழ்கிய தாய், மாடியில் இருந்து விழுந்த ஒன்றரை வயது குழந்தை: சென்னையில் பயங்கரம்

பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் பலியாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலைக்குரியதாக உள்ளது.

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது நானா? அதிபரின் குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகர் மறுப்பு!

உலகில் உற்பத்தியாகும் 30 சதவீத ஆக்ஸிஜன், அமேசான் காட்டில் தான் உற்பத்தி ஆவதாக ஒரு செய்தி வெளியாகிய நிலையில் அந்த அமேசான் காடுகளில் உள்ள மரங்களை அழிக்கும் நோக்கில்

நடுக்காட்டில் பல நாட்களாக தூக்கில் தொங்கிய காதல் ஜோடியின் பிணங்கள்: அதிர்ச்சி தகவல்

அடர்ந்த காட்டுப்பகுதியில் காதல் ஜோடி ஒன்றின் பிணங்களை போலீசார் பல நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் கண்டுபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல அரசியல்வாதி மகன் மீது பாலியல் புகார் கூறிய 'பிக்பாஸ் 2' நடிகை!

தெலுங்கு 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், பிரபல தெலுங்கு நடிகையுமான சஞ்சனா என்பவர் தெலுங்கானா மாநிலம் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன்