close
Choose your channels

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

Thursday, May 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

 

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்கா மனிதர்களின் மீதான தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு இருக்கிறது. ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் அடுத்த வரிசையில் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இஸ்ரேல் கூட தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் கொரோனா கொடுமையான விளைவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி ஒன்றை மட்டுமே இந்த உலகம் நம்பியிருக்கிறது. இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ரோம் நகரில் உள்ள டாகிஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசி முதலில் எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது எனவும் எலிகளில் இந்த மருந்து ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மனித செல்களிலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மிக சிறந்த முறையில் ஆன்டி பாடிகளை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டாக்ஸி நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லூகி ஆரிசிச்சியோ “இந்த தடுப்பூசியை மனித உடலுக்குள் செலுத்தியபோது அது மனித செல்லில் உள்ள கொரோனா வைரஸை அழித்துவிட்டது. இந்த முறையில் மிக வேகமாக தடுப்பூசி செயல்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி மனிதர்களின் மீது செலுத்தி விரைவான சோதனையை ஆரம்பிப்போம் எனவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் உலகிலேயே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடாக இத்தாலி இருக்கும் எனவும் அந்நாட்டின் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.