ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

சமீபத்தில் சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுக்கான புரட்சி போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சென்னையில் 21 மாணவர்களும், தமிழகத்தின் இதர பகுதியில் 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 36 மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. நடிகர் ராகவா லாரன்ஸ் முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார் என்பதை நேற்று பார்த்தோம்
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு வன்முறையில் கைதான 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நிரந்தர மீன்சந்தை தமிழக அரசின் சார்பில் அமைத்து தரப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

இணைவதற்கு முன் மோதலுக்கு தயாராகும் அஜித்-ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் அஜித் படத்தை இயக்கவேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் அவ்வப்போது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்...

விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது...

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்....

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் 'அழகியே'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

விஷ்ணு-ரஜினிக்கு கிடைத்த புதிய புரமோஷன்

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை நல்ல தரமான படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதி புரமோஷன் பெற்றுள்ளனர்...