close
Choose your channels

என்னை மாதிரி கெட்டவ உலகத்துல யாரும் கிடையாது: ஜனனி ஆவேசம்

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும் மற்ற போட்டியாளர்களை கவிழ்க்கவும் செய்யும் முயற்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் இன்று பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இன்றைய முதல் புரமோவில் மணிகண்டன் ஆவேசம் ஆனார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய புரமோ வீடியோவில் ஜனனி பெயர் கொண்ட பொம்மையை ஷெரின் எடுக்கின்றார். அதனால் அவர் இந்த போட்டியில் தொடர முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி ’என்னிடம் நல்ல முறையில் பழகினால் நான் மிகவும் அன்புடன் இருப்பேன், ஆனால் என்னிடம் மோத நினைத்தால் என்னை மாதிரி கெட்டவள் உலகத்திலேயே யாரும் கிடையாது. என்ன மாதிரி அப்பாவியும் யாரும் கிடையாது, என்னை மாதிரி கெட்டவளும் யாரும் கிடையாது என ஆவேசமாக கூறுகிறார்.

இதனை அடுத்து ஜனனி மற்றும் ஷெரினுக்கு இடையே என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.