மோசடி மன்னனுடன் முத்தம்: புகைப்படம் வைரலானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,November 28 2021]

பிரபல நடிகை ஒருவர் மோசடி மன்னனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றுவதிலும், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறிப்பதிலும் கைதேர்ந்தவர் பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர். சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து நூதனமான முறையில் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.

வட இந்திய தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி இதுவரை 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவர் வசித்த மாளிகை போன்ற வீட்டில் நுழைந்த அமலாக்கத் துறையினர் அங்கிருந்த விலை கூடிய பல கார்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் சுகாஷ் சந்திரசேகர் உடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருந்தார் என்பதால் அமலாக்கத்துறையின் அவரிடம் நேரில் வந்து வாக்குமூலம் தருமாறு வலியுறுத்தினர். ஆனால் விசாரணைக்கு வராத அவர் தனக்கு சுகாஷ் என்றால் யார் என்றே தெரியாது என்றும் பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சுகாஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னான்டஸ் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஃபோட்டோ கடந்த ஏப்ரல் ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறை இடம் சுகாஷ் என்பவர் யார் என்றே தெரியாது என ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியது பொய் என்பது இந்த போட்டோ மூலம் நிரூபணம் ஆகியுள்ளதால் அவருக்கு புதிய பிரச்சனை உண்டாகும் என கூறப்படுகிறது.

More News

கவனமாக இருக்க வேண்டும்: திரைப்படத்துறையை விமர்சனம் செய்வது குறித்து அண்ணாமலை கருத்து!

திரைப்படத் துறையை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

கொரோனா வந்தாலும் கமல்ஹாசன் நன்றாக இருப்பதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் கமலஹாசன் நன்றாக இருக்கிறார் என்றால் அதற்கு இதுதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புளூசட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

புளூசட்டை மாறன் இயக்கிய 'ஆன்டி இண்டியன்' என்ற திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது:

மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்: பிக்பாஸில் இன்னும் ஒரு ஆச்சரியம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த இளம் நடிகரா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று