close
Choose your channels

மோசடி மன்னனுடன் முத்தம்: புகைப்படம் வைரலானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை!

Sunday, November 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் மோசடி மன்னனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றுவதிலும், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறிப்பதிலும் கைதேர்ந்தவர் பெங்களூரைச் சேர்ந்த சுகாஷ் சந்திரசேகர். சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து நூதனமான முறையில் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளனர்.

வட இந்திய தொழிலதிபர்கள் பலரை ஏமாற்றி இதுவரை 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவர் வசித்த மாளிகை போன்ற வீட்டில் நுழைந்த அமலாக்கத் துறையினர் அங்கிருந்த விலை கூடிய பல கார்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் சுகாஷ் சந்திரசேகர் உடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நெருக்கமாக இருந்தார் என்பதால் அமலாக்கத்துறையின் அவரிடம் நேரில் வந்து வாக்குமூலம் தருமாறு வலியுறுத்தினர். ஆனால் விசாரணைக்கு வராத அவர் தனக்கு சுகாஷ் என்றால் யார் என்றே தெரியாது என்றும் பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சுகாஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னான்டஸ் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஃபோட்டோ கடந்த ஏப்ரல் ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமலாக்கத்துறை இடம் சுகாஷ் என்பவர் யார் என்றே தெரியாது என ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியது பொய் என்பது இந்த போட்டோ மூலம் நிரூபணம் ஆகியுள்ளதால் அவருக்கு புதிய பிரச்சனை உண்டாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.