தினகரன் குடும்பத்தை அடியோடு ஒதுக்குவோம். ஜெயகுமாரின் திடீர் பல்டிக்கு என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

நேற்று வரை சின்னம்மா சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன் என ஜால்ரா போட்டு வந்த அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள் இன்று திடீரென சசிகலா குடும்பத்தினர்களை குறிப்பாக தினகரனை ஒதுக்க ஆரம்பித்துள்ளதை பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

சசிகலா சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் தினகரனையும் ஒதுக்கினால்தான் கட்சியும் சின்னமும் கைக்கு வரும் என்றும், மக்கள் செல்வாக்குள்ள ஓபிஎஸ் அவர்களை இணைத்தால் தான் இனி அரசியல் செய்ய முடியும் என்றும் மூத்த அமைச்சர்கள் மிக தாமதமாக புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் வெளிப்பாடாக சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சர் ஜெயகுமார், டிடிவி தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாகவும், கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதே ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் ஒற்றுமையாக கட்சியை வழி நடத்துவது அனைவரின் விருப்பம் என்று கூறிய ஜெயகுமார் கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே அதிமுகவின் உண்மையான தொண்டர்களின் எண்ணங்களை இப்போதுதான் ஜெயகுமார் உள்ளிட்டோர் புரிந்து கொண்டார்களா? அல்லது சசிகலா குடும்பத்தை வெளியேற்றினால்தான் ஆட்சியும் கட்சியும் தப்பிக்கும் என்று மத்திய அரசு மிரட்டலால் இந்த கருத்தை கூறினார்களா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்

More News

'பாகுபலி 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்திய ஊடகங்களுக்கு வேற வேலை இல்ல. ஜாமீன் பெற்றதும் கூறிய விஜய் மல்லையா

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இன்று லண்டனில் போலீசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால்  அவருக்கு லண்டன் நீதிமன்றம் மூன்றே மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது...

கைது செய்யப்பட்ட 3 மணி நேரத்தில் ஜாமீன் பெற்ற விஜய்மல்லையா

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்று, அதை திரும்ப கட்டாமல் கடந்த ஆண்டு லண்டனுக்கு சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் இன்று அவர் ஸ்காட்லாந்துயார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்...

மீண்டும் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் நயன்தாரா

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகி விஜய்சேதுபதியை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்தான் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும்...

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சற்று முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.