ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுவா? பிரபல நடிகையுடன் பேச்சுவார்த்தை..!

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை மிஷ்கின் உதவியாளர் புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஜெயம் ரவியின் 32 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பட குழுவினர்களிடமிருந்து கசிந்த தகவலின்படி இந்த படத்திற்கு ’ஜெனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அகமது இயக்கத்தில் உருவான ’’இறைவன்’’ எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மற்றும் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ’சைரன்’ ஆகிய படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பொன்னியின் செல்வன் 2' ரிலீசுக்கு முன் லைகாவின் மாஸ் திட்டம்.. 'கேஜிஎப்' பாணியா?

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த  படத்தின் ரிலீஸ்க்கு ஒரு வாரத்திற்கு முன்னர்

ரஜினி-லோகேஷ் படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா? அப்ப 'கைதி 2' என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் தற்போது

'நம்ம சுத்தி பெருசா ஏதோ நடக்குதுடா.. ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' டிரைலர்..!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ரன்'  என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.

மீண்டும் 'அயலான்' இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்? தயாரிப்பது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  'அயலான்' திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் முடிவுக்கு வர இன்னும் பல

விஷால் படங்களை தியேட்டரில், ஓடிடியில் வெளியிட தடை.. நீதிமன்ற உத்தரவுக்கு என்ன காரணம்?

நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், தமிழ் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது