close
Choose your channels

விஷால் படங்களை தியேட்டரில், ஓடிடியில் வெளியிட தடை.. நீதிமன்ற உத்தரவுக்கு என்ன காரணம்?

Thursday, April 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷால் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா பைனான்சியர் அன்புச்செல்வன் என்பவரிடம் நடிகர் விஷால் ரூ.21 கோடி கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் லைகா நிறுவனம் அந்த கடனை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



லைகா நிறுவனத்திற்கு இந்த கடனை விஷால் திருப்பி செலுத்தும் வரை அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை வழங்க வேண்டும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உத்தரவாதத்தை மீறி விஷால் தயாரிப்பில் உருவான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தை அவர் லைகா நிறுவனத்திற்கு கொடுக்காததால், லைகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் விஷால் ரூபாய் 15 கோடியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி அவரது சொத்து பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.



இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் விஷால் ரூபாய் 15 கோடியை பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பணம் செலுத்தாவிட்டால் விஷால் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் தியேட்டர் அல்லது ஓடிடியில் வெளியிட தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.