close
Choose your channels

மீண்டும் ஜெயம் ரவி வெளியேறுகிறாரா? அவருக்கு பதில் இவரா? 'தக்லைஃப்' படத்தில்  என்னதான் நடக்குது?

Monday, May 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் விலகியதாகவும் அதன் பின் மீண்டும் இருவரும் இணைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் ஜெயம் ரவி விலகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இருவரும் விலகியதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் மீண்டும் இந்த படத்தில் இணைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜெயம் ரவி மட்டும் மீண்டும் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக இந்த படத்தில் அசோக் செல்வன் இணைவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சிம்பு இணைந்துள்ள நிலையில் தற்போது அசோக் செல்வம் இணைவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஜெயம் ரவி விலகியது குறித்தும் அசோக் செல்வன் இணைவது குறித்தும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தகவலை வெளியிடவில்லை என்பதும் அவர்கள் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.