பாஜக வேட்பாளராகும் கமல்-விஜயகாந்த் பட நாயகி!

கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்பட பல தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக நடிகை ஜெயப்ரதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியிலும், சமாஜ்வாடி கட்சியிலும் இருந்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியான ஜெயப்ரதா, அதன்பின் கடந்த 2010ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் தனது சொந்த கட்சியில் இருந்து வெளியேறி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய வேட்பாளர் ஆசிம்கான் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக ஜெயப்ரதாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

மாத்திரை சாப்பிட்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதாரவிக்கு சமந்தா ஆலோசனை

நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து நேற்று திரையுலகினர்களை மட்டுமின்றி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது

ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் பேசக்கூடாது: நயன்தாரா விவகாரம் குறித்து குஷ்பு

'கொலையுதிர்க்காலம்' சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்காத திரையுலகினர்களே இல்லை

ராதாரவி விவகாரம் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை

நடிகர் ராதாரவி சமீபத்தில் நயன்தாரா  நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

ஸ்டாலின், கனிமொழிக்கு நன்றி கூறிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை முதலில் திரையுலகினர் உள்பட யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இதுகுறித்து பதிவு செய்த டுவிட்டுக்களால்தான்