close
Choose your channels

முதலமைச்சர் பேரனுடன் காதல்.. புளியங்கொம்பாய் பிடித்த ஸ்ரீதேவி மகள்..!

Friday, April 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் முன்னாள் முதலமைச்சர் பேரனை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் தற்போது தான் அவர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பதும் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜான்வி தான் நாயகி என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஜான்வி கபூர் காதல் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வந்த நிலையில் அவர் முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் சுசில்குமார் சண்டே என்பவரின் பேரன் ஷிகர் பகாரியா என்பவரை காதலித்து வருவதாக தெரிகிறது.

சமீபத்தில் போனிகபூர் தயாரித்த ’மைதான்’ படத்தின் நிகழ்ச்சியில் ஜான்வி கபூர் கலந்து கொண்ட போது கூட அவர் ஷிக்கு என்னும் பெயர் பொறிக்கப்பட்ட செயினை கழுத்தில் அணிந்து வந்ததை அடுத்து அவரது காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஷிகர் மற்றும் ஜான்வி கபூர் திருமணம் விரைவில் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் ராம்சரண் தேஜா படத்தை முடித்ததும் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் முன்னாள் முதலமைச்சர் பேரனை திருமணம் செய்ய விருப்பம் ஜான்விக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு புடிச்சாலும் புடிச்சார் புளியங்கொம்பாக பிடித்து விட்டார் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.