close
Choose your channels

சீமானை தேடி எல்லோரும் வருவாங்க… ஆருடம் சொல்லும் டிங் டாங் சோதிடர்!

Monday, August 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியலில் 3 ஆவது பெரும் தலைவராக உருவெடுத்து இருக்கும் திரு.சீமான் குறித்து நாடி ஜோதிடர் பாபு அவர்கள் ஒரு வியக்க வைக்கும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது அரசியலில் தனித்து செயல்படும் சீமானைத் தேடி எதிர்காலத்தில் பலரும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அவர் உருவெடுப்பார் என்பது போன்ற கணிப்புகளை ஜோதிடர் பாபு அவர்கள் கூறி இருக்கிறார்.

வித்தியாசமான ஒலிகளை எழுப்பி அதன் மூலம் ஆருடம் சொல்லிவரும் நாடி ஜோதிடர் பாபு குறித்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக வைரலாகி வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஜோதிடர் பாபு சில முக்கியமான தகவல்களைக் கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழக அரசியலில் சீமானின் பங்கு எப்படி இருக்கும்? என்பதும் குறித்தும் புலிப்படை தலைவர் பிரபாகரனுக்கும் சீமானுக்கு இடையே நடந்த சந்திப்பு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வருங்காலங்களில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? இந்திய எல்லையில் நடக்க போகும் மாற்றங்கள், இலங்கை அரசியலில் நடக்கப்போகும் மாற்றங்கள் எனப் பல விஷயங்களைப் பற்றி அவர் ஆருடம் கூறியிருக்கிறார்.

கொரோனா பாதிப்பால் நிலைக்குலைந்துபோன பொருளாதாரம், அன்றாடம் வாழ்வியல் எனத் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். இந்நிலையில் ஜோதிடர் பாபு அவர்கள் அரசியலைப் பற்றியும், இந்திய எல்லைப் பகுதியில் நிகழ இருக்கும் ஆபத்துகள் குறித்தும் கணித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos