close
Choose your channels

மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகிவிட்டாரா? மறைமுகமாக தெரிவித்த ஜோவிகா..!

Tuesday, November 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா ஆரம்பத்தில் தனித்து விளையாடிய நிலையில் கடந்த சில நாட்களாக அவர் மாயா பூர்ணிமா கேங்கில் இருந்து வருகிறார் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் கடந்த வாரம் வெற்றி நடை போடு , வெட்டி நடை போடு என்ற பட்டங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் ஜோவிகாவுக்கு வெட்டி நடை போடு என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

அப்போது அவர் தன்னை உணர்ந்ததாகவும், தான் ஆட்டத்தில் இருந்து விலகிவிட்டதை தெரிந்து கொண்டதாகவும் இனிமேல் தான் சுதாரித்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் இடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதற்கு ஏற்ப அவர் தற்போது மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகி தனித்து விளையாட முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. அவர் தனது டிசர்ட்டில் ’சிங்கம் ஆல்வேஸ் சிங்கிள்’ என்று வார்த்தைகள் கொண்ட டிசர்ட் அணிந்து இருப்பதை கவனித்த விசித்ரா, சிங்கம் எப்போதும் சிங்கிளா? என கேட்க, வேற வழி என்று ஜோவிகா தெரிவித்துள்ளார்.

ஜோவிகா சொன்னதை ஒரு மாதிரியாக பூர்ணிமா பார்த்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். இதிலிருந்து மாயா, பூர்ணிமா கேங்கில் இருந்து விலகி தனித்து விளையாட ஜோவிகா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.