close
Choose your channels

கைவசம் 3 பாலிவுட் படங்கள்.. இந்தி திரையுலகில் பிசியாகும் ஜோதிகா..!

Wednesday, January 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த நிலையில், அதன் பின்னர் ’36 வயதிலேயே’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அதனை அடுத்து அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ’மகளிர் மட்டும்’ ’நாச்சியார்’ ’காற்றின் மொழி’ ’ராட்சசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்

சமீபத்தில் அவர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த ’காதல் தி கோர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு மலையாளத்தில் சில வாய்ப்புகள் கிடைத்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது சூர்யா - ஜோதிகாவின் குழந்தைகள் மும்பையில் படித்து வருவதால் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் ஜோதிகா கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவர் இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருவதாக தெரிகிறது.

அஜய் தேவ்கன், மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ’சைத்தான்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் மாதவனுடன் ஜோதிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகி வரும் ’ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் படிப்பை கவனிக்க வேண்டிய இருப்பதால் அவரால் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அதனால் அவர் தற்போது பாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.