மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]


ஜோதிகா நடித்துள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஒப்பனிங்  வசூல் பிரம்மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ஒரு ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2001ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்த 'டும் டும் டும்' படத்தில் ஜோதிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் உள்பட நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.

More News

சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும்...

ஆசிரியர் ஸ்டிரைக் எதிரொலி: மாணவர்களுக்கு பாடம் எடுத்த சேலம் பெண் கலெக்டர்

சமீபத்தில் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பதவியேற்ற ரோகிணி அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டதால் பெரும் பாராட்டுக்களை பெற்றார் .

11 ஆண்டுகளில் இடிந்து விழுந்த கோவை சோமனூர் பேருந்து நிலையம். அதிர்ச்சியில் பொதுமக்கள்

கோவை சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோடிகள் எனது குறிக்கோள் அல்ல! திரையுலகம்தான் முக்கியம்: விஷால்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' ..

நடிகை லலிதாகுமாரியின் சகோதரர் மகள் திடீர் மாயம்

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகளுமான அபிர்ணா...