ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டது யார்? பிக்பாஸ் 1 போட்டியாளர் கூறும் திடுக் தகவல்

  • IndiaGlitz, [Monday,September 10 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று முன் தினம் கூறியதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கும் இது பெரும் குழப்பத்தையே தந்தது. இதுகுறித்து நேற்று ரித்விகா கூறும்போது, 'ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கூறியதே ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கடைசியில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறார் என்று கமல் கூற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அந்த அளவுக்கு ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று ஒருசிலரை தவிர அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்பதைவிட அவர்தான் அதிக ஓட்டு வாங்கியுள்ளார் என்று கூறியதை சத்தியமாக யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களில் வைக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றிலும் வெற்றி பெறாத ஐஸ்வர்யா, பிக்பாஸ் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்டது மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய காஜல் இதுகுறித்து கூறியபோது, 'ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த இந்த சப்போர்ட் நிச்சயம் மக்கள் கொடுத்தது அல்ல, பிக்பாஸ் ஒரு டீமை வச்சு அவங்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம், நிச்சயம் இது நியாயமாக நடந்த வாக்கெடுப்பாக தெரியவில்லை ' என்று சமூக வலைத்தள பயனாளி ஒருவரின் கேள்விக்கு காஜல் பதிலளித்துள்ளார்.

More News

ரித்விகாவுடன் மோதும் ஐஸ்வர்யா? இந்த வாரமாவது மக்கள் சுதாரிப்பார்களா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் செண்ட்ராயன் வெளியேறியது கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது

டெல்லியில் அரசியல் சந்திப்பா? ரஜினி தரப்பு மறுப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடந்து வருகிறது.

'சென்னையில் ஓர் நாள்' படம் போல் ஒரு நிஜ சம்பவம்

'சென்னையில் ஓர் நாள்' படத்தில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழிவிட்டது போல் கோவையில் நேற்று ஒரு நிஜ சம்பவம் நடந்துள்ளது.

டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் போராட்டம்: தமிழகத்தில் ஒரு விசித்திரம்

கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உண்மையில் ஐஸ்வர்யாவை மக்கள் தான் காப்பாற்றினார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பட்டியலில் இருந்த ஐஸ்வர்யா, மும்தாஜ், செண்ட்ராயன், விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகியோர் இருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக