close
Choose your channels

ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டது யார்? பிக்பாஸ் 1 போட்டியாளர் கூறும் திடுக் தகவல்

Monday, September 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று முன் தினம் கூறியதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கும் இது பெரும் குழப்பத்தையே தந்தது. இதுகுறித்து நேற்று ரித்விகா கூறும்போது, 'ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதாக கூறியதே ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கடைசியில் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுகிறார் என்று கமல் கூற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

அந்த அளவுக்கு ஐஸ்வர்யா வெளியேறுவார் என்று ஒருசிலரை தவிர அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார் என்பதைவிட அவர்தான் அதிக ஓட்டு வாங்கியுள்ளார் என்று கூறியதை சத்தியமாக யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களில் வைக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றிலும் வெற்றி பெறாத ஐஸ்வர்யா, பிக்பாஸ் எவிக்சனில் இருந்து காப்பாற்றப்பட்டது மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய காஜல் இதுகுறித்து கூறியபோது, 'ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த இந்த சப்போர்ட் நிச்சயம் மக்கள் கொடுத்தது அல்ல, பிக்பாஸ் ஒரு டீமை வச்சு அவங்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம், நிச்சயம் இது நியாயமாக நடந்த வாக்கெடுப்பாக தெரியவில்லை ' என்று சமூக வலைத்தள பயனாளி ஒருவரின் கேள்விக்கு காஜல் பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.