காலா' அரசியல் படம் தான்: உண்மையை போட்டு உடைத்த நடிகை

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் அவர் நடித்து வெளியாகவுள்ள 'காலா' படத்தில் அரசியல் கலந்த பஞ்ச் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் காலா ஒரு முக்கியமான அரசியல் செய்தியை சொல்லும் படம் என்றும், காலாவில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள அஞ்சலி பட்டீல் கூறியுள்ளார். மேலும் தான் இந்த படத்தில் தமிழ் பேசும் மராத்தி பெண் கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த கேரக்டர் படத்தின் திருப்புமுனை உண்டாக்கும் கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 'காலா' திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா! சூரப்பா குறித்து விவேக்கின் கவிதை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலையுறுத்தியும் கோலிவுட் திரையுலகினர் பலர் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார்: ஒரு சிறுகுறிப்பு

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வேலூரை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் குறித்து தற்போது பார்ப்போம்

சல்மான்கான் ஜாமீன் பெறுவதில் திடீர் சிக்கல்

அபூர்வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சல்மான்கானை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.

மத்திய அரசின் 4 இணையத்ளங்கள் முடக்கம். சீனர்கள் கைவரிசையா?

மத்திய அரசின் முக்கிய நான்கு இணையதளங்கள் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.