ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

ஜெயம்ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.

இந்த நிலையில் ஜெயம்ரவியின் அடுத்த படமான ’ஜனகனமன’ என்ற படத்தை ’என்றென்றும் காதல்’ இயக்குனர் அஹ்மது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜெயம்ரவியுடன் டாப்ஸி, ஈரான் நடிகை ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’காலா’ படத்தின் வில்லன் நானா படேகர் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்

தங்கர்பச்சான் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் அவர்கள் தனது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும்

சித்தார்த் நடித்த 'அருவம்' சென்சார் தகவல்கள்

சித்தார்த் நடித்த 'அருவம்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக உணவுக்கடைகள் சீல் வைக்கப்படும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வனிதா வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சேரன் - லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருந்தவர் வனிதா. மற்றவர்களை பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும் அவர் கூறுவதில் நியாயம் இருக்கும்

ரஜினி கட்சிக்கு செல்கிறாரா சினேகன்? அவரே அளித்த பதில்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் சார்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவருமான