close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

Thursday, October 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம்ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.

இந்த நிலையில் ஜெயம்ரவியின் அடுத்த படமான ’ஜனகனமன’ என்ற படத்தை ’என்றென்றும் காதல்’ இயக்குனர் அஹ்மது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜெயம்ரவியுடன் டாப்ஸி, ஈரான் நடிகை ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’காலா’ படத்தின் வில்லன் நானா படேகர் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.