தேனிலவை தள்ளி வைத்த காஜல் அகர்வால்: இதுதான் காரணம்!

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

திருமணம் முடிந்ததும் வெளிநாட்டில் தேனிலவு கொண்டாட திட்டமிட்டிருந்த காஜல் அகர்வால் திடீரென தனது தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ என்ற படத்திலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ’ஆச்சாரியா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததை அடுத்து ’ஆச்சாரியா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் முதலில் அந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகுதான் ஹனிமூன் செல்ல காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிரஞ்சீவி படத்தில் நடிப்பதற்காக தனது தேனிலவை காஜல் அகர்வால் தள்ளிவைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அர்ச்சனாவுக்கு வக்காலத்து வாங்கி என்கிட்ட பேசாதே: சம்யுக்தாவை துவம்சம் செய்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி மற்றும் அர்ச்சனாவுக்கு வீட்டை பெருக்கும் பிரச்சனை வெடித்தது என்பதும், அதன்பின் தாய்ப்பாசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பாலாஜியை அர்ச்சனா

ஒத்தை ஆளாக இருந்து 75 உயிர்களைக் காப்பாற்றிய சிறுவன்… குவியும் பாராட்டு!!!

மகாராஷ்டிராவில் 18 வயது சிறுவன் தனி ஆளாக இருந்து தன்னுடைய பெற்றோர் உட்பட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 75 நபர்களைக் காப்பாற்றி இருக்கிறான்.

தீபாவளிக்கு 'மாஸ்டர்' இல்லை: பொங்கலுக்காவது வருமா? தயாரிப்பாளர் விளக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி திறக்க உள்ளன. ஏற்கனவே நாடு முழுவதும் திரையரங்குகள் திறந்து விட்ட

தேர்தல் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து விட்டது

திரையரங்குகள் திறந்தாலும் புதுப்படங்கள் வெளிவராது: பாரதிராஜா அறிவிப்பால் பரபரப்பு!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் பத்தாம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.