அன்பானவர் அசராதவர் பிரமாதமானவர்: அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல்

  • IndiaGlitz, [Thursday,July 06 2017]

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் பெருமையை பெற்றவர் காஜல் அகர்வால். மேலும் கோலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகரான சூர்யாவுடனும் நடித்தவர். இந்த நிலையில் அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

அன்பு, மரியாதையுடன் செட்டில் அனைவரையும் சமமாக நடத்துபவர் அஜித். யாருக்கும் அட்வைஸ் செய்ய மாட்டார். ஆனால் அவரை சும்மா கவனித்தாலே போதும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் அவருடைய பிரியாணி எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் செய்து கொடுத்தார். சான்ஸே இல்லை அவ்வளவு டேஸ்ட் என்று அஜித் குறித்து காஜல் கூறினார்.

விஜய் குறித்து அவர் கூறியபோது, 'நல்ல கடின உழைப்பாளி, செட்டில் அமைதியாக இருந்தாலும் கேமிரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன் நடிப்பில் அனைவரையும் அசரடிப்பார். வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ள பக்குவத்தை அவரிடம் இருந்துதான் அனைவரும் கற்று கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

சூர்யா குறித்து காஜல் கூறியபோது, 'சூர்யா, பிரமாதமான நடிகர். நடிப்புல மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்' என்று கூறினார்.

More News

முதலில் கோரிக்கை வைப்போம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி டுவீட்டுக்கு கமல் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று கேளிக்கை வரியை ரத்து செய்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளிகளை தமிழக அரசு காக்க வேண்டும் என்று தனது டுவிட்டரின் மூலம் கேட்டுக்கொண்டார்.

நிஜத்தில் 'ஹீரோ'வாக மாறிய 'தெறி' வில்லன்

தளபதி விஜய் நடித்த 'தெறி' உள்பட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் தீனா

ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன...

பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,