கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Tuesday,March 22 2016]

கலாபவன் மணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று உறுதி செய்யப்பட்டிருப்பனும் அவர் மரணத்திற்கு காரணம் யார்? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை தெரியாமல் இருந்தது

இந்நிலையில் கலாபவன் மணியின் சிறுநீர் மற்ற ரத்த மாதிரிகளில் செய்த ஆய்வில் அவருடைய உடலில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அவருடைய மாமனார் பூச்சிமருந்து வாங்கியது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை பூச்சிமருந்து கடைக்காரரும் உறுதி செய்துள்ளார்.

கலாபவன் மணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்த நிலையில் அவருடைய மாமனார் பூச்சிமருந்து வாங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனார் சுதாகரனிடம் தற்போது போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் யார்? என்பது குறித்து தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More News

சிம்புவுடன் இணைவார்களா விஜய்சேதுபதி, ஜீவா?

லில் விஜய்யின் 'தெறி' மற்றும் சூர்யாவின் '24' ஆகிய படங்கள் மற்றும் மே மாதத்தில் ரஜினியின் 'கபாலி' போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும்...

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக மாறுவாரா சூர்யா?

மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை...

அந்நியன் அம்பி கேரக்டரில் ஆஸ்கார் விருது நடிகர்

அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்களில் நமது சீயான் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்...

'2.0' எமிஜாக்சன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது...

விமான பைலட் ஆகிறார் கார்த்தி

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் சங்க பொருளாளராக இருக்கும் கார்த்தி, விரைவில் விமானம் ஓட்டும் பைலட் ஆக மாறவிருக்கின்றார்....