close
Choose your channels

மகேஷ்பாபுவுக்கு வில்லனாக மாறுவாரா சூர்யா?

Tuesday, March 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவி' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கும் வில்லனாக மாறவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவுள்ளது.

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் வில்லனுக்கு வெயிட்டான ரோல் என்றும், அந்த கேரக்டரில் நடிக்க வெயிட்டான சம்பளமும் அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கேரக்டரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் பவன்கல்யாண் நடிப்பில் 'குஷி 2' படத்தையும் அவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.