கலாபவன் மணி எப்படி இறந்தார்..? அறிக்கை வெளியிட்ட சிபிஐ.

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

'கலாபவன் மணி கொல்லப்படவில்லை, கல்லீரல் கெட்டுப் போன நிலையிலும் தொடர்ந்து மது அருந்தியதே அவரின் மரணத்துக்குக் காரணம்' என்று சி.பி.ஐ அறிக்கை அளித்துள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த கலாபவன் மணி 2016-ம் ஆண்டு மார்ச் 3- ந் தேதி திடீரென்று மரணமடைந்தார். சாலக்குடி அருகே தன் பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்தார்.

பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 45. கலாபவன் மணி இறப்பில், சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். உடற்கூறாய்வில், அவரின் உடலிலிருந்து காய்கறிப் பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான Chlorpyrifos இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது.

தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ அளித்துள்ள அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.35 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், ''கலாபவன் மணிக்குக் காய்கறிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. அதன் வழியாக அவரின் உடலில் Chlorpyrifos பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளது. அதோடு, இறக்கும் போது அவரின் உடலில் 4 மில்லிகிராம் எத்தனாலும் இருந்துள்ளது. மதுவுடன் எத்தனாலையும் கலந்து குடிக்கும் பழக்கம் கலாபவன் மணிக்கு இருந்துள்ளது. ஏற்கெனவே, அவருக்குக் கல்லீரல் கெட்டுப் போயிருந்ததால் எத்தனாலைக் கழிவுகளாக வெளியேற்ற முடியாமல் போயுள்ளது. இறக்கும் போது சிறிதளவு கஞ்சா அவரின் உடலில் இருந்துள்ளது. கல்லீரல் பிரச்னைக்கு அவர் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துச் சாப்பிட்டு வந்துள்ளார். அதில், கஞ்சா சிறிதளவு சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படி, அவரின் உடலில் கஞ்சா கலந்திருக்கலாம்'' என்று சொல்லப்பட்டுள்ளது.

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாக இருந்தது.

விஜய்சேதுபதியுடன் இணையும் பா.ரஞ்சித்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள்

சென்னையில் பிடிபட்ட 3 கிலோ கஞ்சா: பழம்பெரும் பாடகரின் பேரன் கைது!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக தங்கி இருப்பதாகவும், அந்த வீட்டில் அடிக்கடி சிலர் வந்து போவதாகவும்,

'தளபதி 64' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதோ

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் 'தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

'கபாலி' பாணியில் விளம்பரம் செய்யப்படும் 'தர்பார்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம்