ராணி எலிசபெத்துடன் கைகுலுக்கிய கமல்

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா நேற்று மாலை லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்களில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் என்பதை நேற்று பார்த்தோம்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் அவர்களுடன் கமல்ஹாசன் கைகுலுக்கி தனது வணக்கத்தை தெரிவித்தார். ராணி எலிசபெத் அவர்கள் அவருடைய வணக்கத்தை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

ராணியுடன் கமல் கைகுலுக்கிய புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக இணையதளங்களிலும் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்களை கமல் ரசிகர்கள் மிக அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

More News

நெடுவாசல் செல்கிறேன். மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் நெடுவாசல் விவசாயிகளை காப்பாற்ற அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள புறப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்...

முத்துராமலிங்கம் படத்தை உடனடியாக நிறுத்த சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் ராஜதுரை இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'முத்துராமலிங்கம். இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது....

ஓபிஎஸ் வீட்டின் முன் பேசிய ஜெயலலிதா ஆவி. சாமியார் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆன்மாவின் ஆணைக்கேற்ப அனைத்து உண்மைகளையும் கூறியதாக சென்னை மெரீனாவில் மெளனத்தை ஓபிஎஸ் எப்போது கலைத்தரோ அதும்முதல் பலர் ஜெயலலிதாவின் ஆவி, ஆன்மா பேசியதாக தங்கள் கருத்துக்களை (கதைகளை) கூறி வருகின்றனர்.

துரைமுருகனை சிரிக்க வைத்த ஜெயலலிதா- ஓபிஎஸ் சொல்லும் சுவாரஸ்யம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென அவரை சசிகலா ராஜினாமா செய்ய வற்புறுத்தினார் என்பது தெரிந்ததே

அர்னாப் தலைமையிலான சேனலில் இணையும் தமிழக செய்தியாளர்

டைம்ஸ் ஆப் இந்தியா புகழ் அர்னாப் கோஸ்வாமி 'ரிபப்ளிக்' என்ற ஆங்கில தேசிய சேனலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த சேனலில் தமிழ் செய்தி சேனல் தந்திடிவியின் முன்னணி செய்தி ஆசிரியரான ஹரிஹரன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.