close
Choose your channels

கமல்ஹாசன் - எஸ்.எஸ்.ராஜமெளலி திடீர் சந்திப்பு.. பிரமாண்டமா திட்டமா?

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்ததாகவும் இருவரும் இணைந்து ஒரு பிரம்மாண்டமான படத்தை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தி இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’விக்ரம் 3’ என அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கமல் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது மகேஷ்பாபுவின் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் கமல்ஹாசன் படத்தை தொடங்குவார் என்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி, கமல் படத்திற்கு தயாராகிவிட்டால் கமல்ஹாசனின் மற்ற படங்கள் ஒத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு அறிவிப்பு வெளிவந்த பின்னரே இந்த செய்தி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment