மோடி பதவியேற்பு விழாவுக்கு கமலுக்கு அழைப்பு இல்லையா?

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நாளை பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்றைய பேட்டியில் உறுதி செய்த ரஜினிகாந்த், பதவியேற்பு விழாவில் தான் கலந்து கொள்ள போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய கமலுக்கு பாஜக அழைப்பா? என பலர் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் இந்த அழைப்பை கமல்ஹாசனோ, மக்கள் நீதி மய்யம் கட்சியோ இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் 'கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்?' என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதில் இருந்து கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததாக வெளிவந்த செய்தியிலும் உண்மையில்லை என்று கூறப்படுகிறது

More News

அரசை குறைகூறாமல் அதிரடியில் இறங்கிய ரஜினி மன்றத்தினர்

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அரசை குறை கூறிக்கொண்டு, போராட்டம் நடத்தி, மக்களின் கவனத்தை பெற்று, தங்களுக்கும் தங்களது கட்சிக்கும் விளம்பரம் தேடி கொண்டிருப்பவர்களின்

ஐபிஎஸ் பதவியை துறந்து அரசியலுக்கு வரும் 'கர்நாடக' சிங்கம்'

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை என்ற ஐபிஎஸ் அதிகாரி, தனது பணியை துறந்து அரசியலில் நுழையவுள்ளார்.

60 அடி ஆழ கிணற்றில் இறங்கி ரிஸ்க் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டுக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நபர்களின் உயிர்களை காப்பாற்ற அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஒருவர் ரிஸ்க் எடுத்து 60 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமைச்சருக்கு லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகள்:. சு.சுவாமி திடுக் தகவல்

அரசு பணி ஒன்றின் அனுமதியை பெற அமைச்சர் ஒருவர் லஞ்சமாக இரண்டு பாலிவுட் நடிகைகளை கேட்டால் அதற்கு என்ன தண்டனை என்று தான் ஆராய்ந்து வருவதாகவும்,

முடிந்தது 'சிந்துபாத்' வியாபாரம்: விரைவில் ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும்  போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரிலிசுக்கு தயாராக உள்ளது.