விஸ்வரூபம் 2, 'சபாஷ்நாயுடு' முடிந்த பின்னர் தான் அரசியல்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் வெகுவிரைவில் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வரவிருப்பதாகவும், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் குறித்து அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், 'விஸ்வரூபம் 2', 'சபாஷ்நாயுடு' ஆகிய இரண்டு படத்தையும் முடிக்காமல் அரசியலுக்கு சென்றால் என்னை நம்பி பணம் போட்டவர்கள் ஏமாந்துவிடுவார்கள். எனவே இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்னர் தான் அரசியலுக்கு வரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு வந்தபின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், இரண்டு படகுகளில் கால் வைத்து கொண்டு இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் கமல்ஹாசன் இந்த பேட்டியில் அவருடைய நீண்டகால கனவுப்படமான 'மருதநாயகம்' மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் காலமானார்

ஏராளமான நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பழம்பெரும் குணசித்திர நடிகர் பீலிசிவம் நேற்று காலமானார். அவருக்கு வயது 79. 

நயன்தாராவின் 'அறம்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான 'அறம்' ....

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறக்கும் தேதி அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி பிறந்த நாள் அன்று திறக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 லட்சத்தை தட்டி சென்ற பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் தமிழ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுஜாவின் முதல் பதிவு

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட சுஜா, முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பதிவு இது