close
Choose your channels

மக்களால் தேர்வு செய்யப்பட்ட 4வது இறுதிப்போட்டி வேட்பாளர்: கமல் அறிவிப்பு!

Sunday, January 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே 3 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நான்காவது இறுதி போட்டியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் நிறைவு பெற போகிறது என்பதும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டிக்கு முதல் நபராக அமீர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதனை அடுத்து நிரூப் மற்றும் ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படும் நான்காவது போட்டியாளர் பிரியங்கா என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பிரியங்காவை இறுதிப்போட்டிக்கு மக்களே தேர்ந்தெடுத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வாரம் எவிக்சன் செய்யப்படுவது யார் என்பதையும் கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். பாவனி மற்றும் தாமரை ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருக்கும் நிலையில் இந்த இருவரில் எவிக்சன் செய்யப்படுவது யார் என்பதை கமல்ஹாசன் இன்று அறிவிக்க இருக்கும் காட்சிகளோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வாரம் தாமரைதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார் என்ற செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் அமீர், ராஜு, நிரூப் மற்றும் பிரியங்கா ஆகிய நால்வரில் பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வெற்றி பெறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.