'என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கர்'.. 'கமல் 234' படத்தின் டைட்டில் வீடியோ
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தின் டைட்டில் அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வீடியோவின் ஆரம்பத்திலேயே கமல்ஹாசன் ’என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், காயல்பட்டினத்துக்காரன்’ என்று சொல்வதில் இருந்தே இந்த படத்தின் ‘நாயகன்’ படத்தின் அடுத்த பாகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ’நான் பொறக்கும் போததே, என் தலையில் எழுதி வச்சுட்டாங்க, நான் ஒரு கிரிமினல், யாகுசான்னு.. யாகுசான்னா ஜப்பான் மொழியில் கேங்ஸ்டர் என்று அர்த்தம்’ என்று கூறுவதில் இருந்து இந்த படத்தின் கதைக்களம் ஜப்பானாக இருக்கலாம்.
’காலன் என்னை தேடி வந்தது இது முதல் முறையல்ல, கடைசி முறையும் இல்ல, என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயகன், ஞாபகம் வச்சுக்கோங்க’ என கமல் ஆவேசமாக பேசும் வசனத்துடன் இந்த வீடியோ முடிவு குறைக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ’Thug Life’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில், அன்பறிவ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் வீடியோவே மாஸாக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments