ஃபேவரிட்டிசம் குறித்து கன்னத்தில் அறைவது போல் கூறிய கமல்.. மாயா, பூர்ணிமா அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபேவரிட்டிசம் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் ஒரு போட்டியாளருக்கு விருப்பமானவர் என்ன தப்பு செய்தாலும் கண்டு கொள்ளவில்லை, அவருக்கு ஆதரவாக இருப்பதையே ஃபேவரிட்டிசம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் ’யாருடைய ஃபேவரிட்டிசம் இந்த விளையாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று நினைக்கிறீர்கள்’ என்ற கேள்வியை கேட்கிறார். அப்பொழுது பூர்ணிமா எழுந்து ’அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் ஃபேவரிட்டிசமாக உள்ளனர் என்று கூறுகிறார்.
இதனை அடுத்து ஜோவிகா கூறியபோது, ’தினேஷ்,மணிக்கு ஃபேவரிட்டிசம் பண்றார்’ என்று கூறுகிறார். தினேஷ் எழுந்து ’மாயா மற்றும் பூரியுமா ஆகிய இருவரும் ஃபேவரிட் செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். அதன்பின்னர் அர்ச்சனா எழுந்து ’மாயா தான் தலைமை, மற்றவர்கள் அவருடைய ஃபாலோயர்கள், இவர் சொல்வதை மற்றவர்கள் மற்றவர்கள் செய்வார்கள்’ என்று கூறுகிறார்.
இதனை அடுத்து மாயா விளக்கம் அளிக்கும்போது ’பூர்ணிமாவை வந்து நான் காப்பாற்றுகிறேன் என்று நினைக்கிறேன், நிஜமாகவே பூர்ணிமா மீதுள்ள ஒரு அன்பு என்னை தடுக்குது’ என்று கூறுகிறார்.
அப்போது கமல்ஹாசன் ஃபேவரிட்டிசத்தின் ஆபத்து என்னவென்றால் திறமை இல்லாதவர்களை தூக்கி மேலே வைத்து விடும், கிட்டத்தட்ட லஞ்சம் மாதிரி, கொடுப்பதும் தப்பு வாங்குறதும் தப்பு என கூற மாயா மற்றும் பூர்ணிமா அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இன்றைய எபிசோடில் ஃபேவரிட்டிசம் குறித்து இன்னும் அதிகமாக கமல் பேசியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments