மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசை மட்டுமின்றி மாநில அரசையும் பால்கனி அரசுகள் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில் முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்

சமீபத்தில் தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து அரசாணைகள் வெளியிட்டதை கமல்ஹாசன் தனது டுவிட்டில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???

உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும்

நாங்கள்‌ எங்கள் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: தஞ்சை கோவில் சர்ச்சை குறித்து சூர்யாவின் அறிக்கை

கடந்த சில நாட்களாக ஜோதிகா பேசிய தஞ்சை பெரிய கோவில் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்

எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டும்தானா? அமலாபால் ஆவேச கேள்வி

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எல்லாம் பெண்களை நோக்கியே வருவதாகவும் ஆண்களிடம்