பெண் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நாயகி.. அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது கணவருடன் சேர்ந்து பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அர்ஜூன் நடித்த ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. அதன் பிறகு ’மிடில் கிளாஸ் மாதவன்’ ’சமுத்திரம்’ ’சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அபிராமி, உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ’விருமாண்டி’ என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்..

இந்த நிலையில் நடிகை அபிராமி ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: நானும் ராகுலும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்ததன் மூலம் பெற்றோராகியுள்ளோம். கல்கி என்ற பெயர் கொண்ட அந்த குழந்தையை நாங்கள் கடந்த ஆண்டு தத்தெடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அது முதல் எங்கள் வாழ்க்கை வித்தியாசமாக மாறி உள்ளது. இன்று அன்னையர் தினத்தில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன். அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை அபிராமி தனது மற்றும் தத்தெடுத்த பெண் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

விக்ரம்-ஐஸ்வர்யா ராய் இணையும் இன்னொரு படம்.. தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'ராவணன்' என்ற திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர். அதன் பிறகு சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்'

18 வயதில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் கணவருக்கு 7 வயது: விஜய் பட நடிகை பேட்டி..!

பிரபல நடிகை தன்னைவிட 10 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 18 வயதில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் கணவருக்கு ஏழு வயது என்று தனது மாமியார் கூறியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய தனுஷ் பட நடிகை.. என்ன காரணம்..!

தனுஷ் உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை திடீரென அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'PS 1' படத்தை அடுத்து மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் ஆடியோ விழா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய

பாலிவுட் பிரபலத்துடன் முதல்முறையாக இணையும் மாதவன்.. இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகருடன் இணைந்து நடிகர் மாதவன் முதல்முறையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.