வசந்தகுமார் மறைவுக்கு கமல், ரஜினி, பிரபு இரங்கல்!

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் நேற்று மாலை மறைவடைந்த நிலையில் அவரது மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் வசந்தகுமார் மறைவுக்கு தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது: நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு என்று கூறியுள்ளார்.

அதேபோல் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், ‘அருமை நண்பர் திரு.வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் வசந்தகுமார் மறைவு குறித்து, ‘நல் உள்ளம் கொண்டவர் நேர்மையானவர் உழைப்பாளி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், என் அன்பு அண்ணாச்சி வசந்த் அன் கோ வசந்தகுமார் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.. அவர் ஆத்மா சாந்தி அடைய அப்பாவை வேண்டுகிறேன் இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

More News

ஆளுனராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவு குறித்து தமிழிசை

நேற்று மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் பழம்பெரும் அரசியல்வாதி குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், அவருடைய மகளும் தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை  செளந்தராஜன் அவர்களின் சித்தப்பா

உலகின் அதிகவேகமான மனித கால்குலேட்டர்… 20 வயதில் சாதனை படைத்த இந்திய இளைஞர்!!!

பெங்களூரைச் சேர்ந்த சகுந்தலா தேவி உலகின் அதிகவேக மனிதக் கால்குலேட்டராகச் செயல்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தார்.

ஐபிஎல் விளையாட சென்ற சிஎஸ்கே அணியில் கொரோனாவா? பரபரப்புத் தகவல்!!!

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது

வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சற்றுமுன் கொரோனாவுக்கு பலியானார்.