close
Choose your channels

ஆளுனராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவு குறித்து தமிழிசை

Saturday, August 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆளுனராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவு குறித்து தமிழிசை

நேற்று மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் பழம்பெரும் அரசியல்வாதி குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், அவருடைய மகளும் தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை செளந்தராஜன் அவர்களின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது சித்தப்பா மறைவு குறித்து தமிழிசை செளந்தரராஜன் அவரகள் கூறியதாவது:

சித்தப்பா :

நீங்கள்‌ இல்லை என்பதை என்‌ மனது நம்ப மறுக்கிறது...

என்‌ சிறு வயது முதல்‌ அவருக்கு திருமணம்‌ வரை ஒன்றாகவே வள்ந்தோம்‌..

அப்பா குமரி அனந்தனின்‌ அரசியல்‌ தாக்கம்‌ இரண்டு பேரிடமும்‌ இருந்தது
ஆனால்‌ வேறு வேறு பாதையில்‌ பயணித்தோம்‌...

இயக்கம்‌ வேறாக இருந்ததால்‌ இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம்‌
இருவரிடமும்‌ உண்டு,

தூரத்தில்‌ இருந்தே அவரின்‌ சுறுகறுப்பையும் துருதுருப்பையும்‌ கண்டு
வியந்திருக்கிறேன்‌..

'சிறுவயதில்‌ ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது , சண்டையிட்டது எல்லாம்‌.
நினைவிற்கு வருகிறது...

வசந்த்‌ அண்ட் கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த
'தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம்‌ பதைபதைக்கிறது...

கண்டிப்புடன்‌ கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்‌ ...
கரைபரண்டு கண்ணி பெருகுகிறது..

ஆளுநராக இருந்தாலும்‌

அண்ணன்‌ மகளாக அழுது கொண்டிருக்கிறேன்‌...

தமிழிசை செளந்தரராஜன்‌
 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.