பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்!

அரசியல்ரீதியாக பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து நேற்று பிரதமர் மோடி பேசியபோது வரும் 22ஆம் தேதி பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே ஒரு சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொண்டு அத்தியாவசியப் பணிகள் செய்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், 22-ம் தேதி வீட்டில் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்பவர்களுக்காக கைதட்டல் மூலம் நன்றி தெரிவியுங்கள்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில், ‘கொரோனா விவகாரத்தில் நமது பிரதமரின் அழைப்புக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு என்பதால் அனைவரும் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள் இருப்பதன் மூலம், நாம் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

மேலும் மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எனது ரசிகர்கள், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

பிரதமர் மோடிக்கு நடிகை வரலட்சுமி கேட்ட ஆவேசமான கேள்வி

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயாவுக்கு நடந்தது என்ன??? வழக்குகள், தண்டனை குறித்த ஒரு தொகுப்பு!!!

டெல்லியில் 16, டிசம்பர் 2012 அன்று குளிர்ந்த இரவு நேரத்தில் 23 வயது பிசியோதெரபி மருத்துவம் படிக்கு

பிரபல பாடகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா

அசோக்செல்வனின் அடுத்த படத்திலும் இரண்டு ஹீரோயின்கள்

அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது தெரிந்ததே.

கொரோனா எச்சரிக்கை நடவடிக்கை: இன்று முதல் தமிழக கேரள எல்லை மூடல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று மாலை முதல்