தீபிகாவின் தலை காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,November 21 2017]

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே மற்றும் இயக்குனரின் தலைக்கு தலா ரூ.5 கோடி விலை வைத்து ஒருசில அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த அறிவிப்புக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும்.  இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும்.  இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

கதாநாயகன் ஆகிறார் பிரபல வில்லன் நடிகரின் மகன்

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கார்த்தி மிகவும் அமைதியானவர்: 'தீரன்' வில்லன் நடிகர் ரோஹித் பதக் புகழாரம்

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில்

விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் இணைந்த அதிசய நிகழ்வு

கோலிவுட்டில் தயாராகி வரும் நான்கு படங்களில் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெறுகிறது.

அதர்வாவின் 'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் தேதி

அதர்வா நடித்து, தயாரித்து வரும் 'செம போத ஆகாதே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்: யூனிசெப் தூதர் த்ரிஷா கருத்து

யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்