தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: 'மருதநாயகம்' பாடல் குறித்து கமல்

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

நேற்று முன் தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்தாலும் பொன்பரப்பி போன்ற ஒருசில இடங்களில் மட்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக பொன்பரப்பி கிராமத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட ஜாதி - தேர்தல் மோதல் இன்னும் தமிழகத்தில் ஜாதி வெறி அடங்கவில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

இந்த நிலையில் பொன்பரப்பி கலவரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'மருதநாயகம்' படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்ட பாடல் இதுதான்:

மதங்கொண்டு வந்தது சாதி
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி - இங்கு
ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி

More News

கார்களை பந்தாடிய மதம் பிடித்த யானை! வைரலாகும் வீடியோ

கேரள மாநிலத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் கார்கள் உள்பட பல பொருட்களை அந்த யானை துவம்சம் செய்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரம்யாகிருஷ்ணன்!

கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திகில் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

இந்த ஏரியின் அருகே ஒரு மணி நேரம் நின்றாலே மரணம் நிச்சயம்!

இயற்கை மனிதர்களை பல்வேறு வகையில் பாதுகாத்து வந்தாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளால், விஷய தன்மை கொண்டதாக மாறி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது..

பொது இடத்தில், கணவரை ஷூ லேஸ் கட்ட வைத்த நடிகை சோனம் கபூர்! வைரலாக பரவும் புகைப்படம்!

பொது இடத்தில் கௌரவம் பார்க்காமல், பிரபல நடிகைக்கு அவருடைய கணவர் ஷூ லேஸ் கட்டி விட்ட சம்பவம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனையா?

தாய்லாந்து நாட்டில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.