500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,January 02 2019]

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களும், பெண் குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் என பெரும்பாலான விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம் தான் கனா

இந்த நிலையில் ஒரு பெண்ணின் கனவு நனவாகும் கதையம்சம் கொண்ட இந்த படம் சமீபத்தில் ஐடி துறையில் பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட ஐடி பெண்கள் கலந்து கொண்டு படம் பார்த்து, படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்

இந்த படம் தங்களின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும் அளவுக்கு தன்னம்பிக்கை கொடுத்ததாகவும், ஒவ்வொரு பெண்ணும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் படம் பார்த்த பெண்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு திரைப்படம் வசூல் அளவில் மட்டும் வெற்றி பெறாமல் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் பதியும் அளவுக்கு நல்ல கருத்தை கூறிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

More News

பிறந்த நாளில் சிம்புவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

25 ஆண்டு திருமண வாழ்க்கை: பில்கேட்ஸ் மனைவி பெருமிதம்

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நேற்று தனது மனைவி மெலிண்டாவுடன் 25வது திருமண நாளை கொண்டாடினார்.

பொங்கலுக்கு வெளியாகும் 'பரியேறும் பெருமாள்' கதிர் படம்

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்த நடிகர் கதிர் நடித்த படங்களில் ஒன்று 'சிகை'. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை

மலேசியாவைக் கலக்கும் 'பேட்ட' பேரணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

புத்தாண்டை சூர்யா கொண்டாடியது எந்த நாட்டில் தெரியுமா?

2019ஆம் ஆண்டின் புத்தாண்டு உலகம் முழுவதும் நேற்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலர் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நேற்றைய புத்தாண்டை கொண்டாடினர்.