முதல்முறையாக பெண்களின் பாராட்டுக்களை பெற்ற ஸ்ரீரெட்டி வீடியோ

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதும், ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதும் தான் தெரியும் இதனால் தான் ஸ்ரீரெட்டியின் சமூக வலைத்தள பக்கங்களை பெரும்பாலும் பெண்கள் ஃபாலோ செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக பெண்கள் பாராட்டும் வகையில் ஒரு வீடியோவை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் பட்டு புடவையை ஒரு திருவிழாவுக்கோ அல்லது விசேஷங்களுக்கோ செல்லும் போது எப்படி முறையாக உடுத்த வேண்டும் என்பது குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

20 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் அவர் ஒரு பட்டுப்புடவையை எப்படி நேர்த்தியாக கட்டவேண்டும், கொசுவம் எப்படி அமைக்க வேண்டும், கொசுவம் வைப்பதற்கு முன்னர் அதை தனியாக இஸ்திரி செய்ய வேண்டும் ஆகியவை குறித்து மிகவும் விரிவாக இந்த வீடியோவில் செய்து காட்டியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது அந்த வீடியோவுக்கு பதிவாகி உள்ள கமெண்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. முதல் முறையாக பெண்களையும் கவரும் வகையில் வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஊரடங்கு முடிந்தாலும் சுய கட்டுப்பாடு வேண்டும்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் பிரச்சனை, ஊரடங்கு பிரச்சனை ஆகியவை முடிந்தபின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்க்கு திரும்பியதுடன் என்ன நடக்கும் என்பது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர்.

சாணி மேல தள்ளி விட்டுட்டாங்களே: ஆர்ஜே மணிமேகலை புலம்பல்

பிரபல ஆர்ஜே மணிமேகலை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தனது சொந்த கிராமத்தில் இருந்து கொண்டு வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில்

இதை மட்டும் செய்தால் குற்றங்கள் குறைந்துவிடும்: மீராமிதுன் ஐடியா

கமலஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்த போதும் சர்ச்சைக்குறிய

ரஜினி வீட்டு முன் திடீரென போராட்டம் செய்த திருநங்கைகள்: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திடீரென 8 திருநங்கைகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95% உயர்வு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து பணி